fbpx

ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு…! இன்று முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பங்களை திருத்தலாம்…!

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்திக் கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 05.06.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 12.07.2023 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, விண்ணப்பதாரரிகள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 1707.2023 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆளுநர் மாளிகை வழங்கும் ரூ.5 லட்சம் + விருது...! ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Thu Jul 13 , 2023
தமிழ்நாடு கவர்னர் மாளிகை சார்பில், சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில், 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு, 2024 குடியரசு தினத்தன்று, பாராட்டு சான்று மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப, இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஒவ்வொரு பிரிவிலும், ஒரு நிறுவனம் மற்றும் மூன்று தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன், ஐந்து […]
’தமிழ் மக்கள் போல் தமிழில் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’..! ஒருநாள் தமிழில் பேசுவேன்..! ஆளுநர்

You May Like