புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னுடைய சொந்த ஊரில் அமைந்துள்ள பள்ளியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
மேலும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளியிலேயே முழுநேரமும் இருப்பதுடன் அப்பகுதி இளைஞர்களையும் அழைத்து அவருடன் வைத்துக் கொள்கிறார் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவில், ஆசிரியர் ஒரு முன்னாள் மாணவருடன் ரொம்ப மோசமாகவே உள்ளது. அதில் ‘அன்று நீ வரவில்லை உனக்காக நான் ரொம்ப நேரம் காத்திருந்தேன். நாளை மேட்ச் இருக்கிறது எனவே காலையில் அது முடிந்த பிறகு நீ வா ‘ என்று அந்த ஆடியோவில் பேசிய வார்த்தைகள் வெளியாகியுள்ளது.
இந்த பதிவு மாணவர்களின் பெற்றோர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து இதனை பற்றி கல்வித்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களின் போராட்டம் வெடிக்கும் நிலை உருவாகும் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இது குறித்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார் எனவும் அதனால் அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.