fbpx

காலையிலேயே பயங்கரம்…! ஆன்மீக சுற்றுலா ரயில்… மதுரை அருகே தீ விபத்து… 8 பேர் உயிரிழப்பு..!

மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயிலின் பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலி.

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாரத் கௌரவ் என்ற ஆன்மீகச் சுற்றுலா ரயில் இன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் உள்ள 2 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்டுகிறது. மேலும் உயிருக்கு ஆபத்தான வகையில் பல பயணிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரை ரயில் நிலையம் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த ரயிலில் இருந்த பக்தர்கள் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Kathir

Next Post

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி கையிருப்பு 24.7% அதிகரிப்பு...! மத்திய அரசு விளக்கம்...!

Sat Aug 26 , 2023
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் ‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்குப் பார்வையை அடைவதில் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அமைச்சகம் எட்டியுள்ளது. தடையற்ற நிலக்கரி விநியோகத்தைத் தக்கவைப்பதற்கான அமைச்சகத்தின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது.23.08.23 நிலவரப்படி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து போன்றவற்றில் மொத்த நிலக்கரி இருப்பு […]

You May Like