fbpx

திமுக அரசைக் கண்டித்து 21-ம் தேதி மாபெரும் போராட்டம்…! தேதியை குறித்த அண்ணாமலை…!

திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் இனப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமியின் இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. திமுக அரசு வருவாய்க்காக மக்களை மதுவிற்கு அடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்ததாக, மாவட்ட ஆட்சியரே, மனம் திறந்து பேசி இருக்கிறார். எல்லா மட்டத்திலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. வயது வித்தியாசமின்றி சிறார்களும் அதை எளிதில் பெற முடிகிறது. தமிழ்நாடு இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 21-ம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகிலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. முன்னதாக, ராணுவ வீரரை நடுத்தெருவில் அடித்துக் கொன்ற திமுகவை கண்டித்து, அதேநாளில் காலையில் சிவானந்தா சாலையில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது.

மக்கள் அனைவரும், ஆட்சியாளர்களையும் அவர்களின் அத்துமீறல்களையும், அராஜகங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அரசுக்கு உணர்த்துவதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம். மக்களுக்கான இந்த அறப்போராட்டத்தில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Vignesh

Next Post

மாரடைப்பால் ஊடகவியலாளர் திடீர் மரணம்!.... ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த சோகம்!...

Mon Feb 20 , 2023
டெல்லி ராஜ்கோட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கிரிக்கெட் மைதானத்திலேயே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜ்கோட்டின் ஊடகவியலாளர்கள் சார்பில் டி-20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் (31) கலந்துகொண்டிருந்தார். இவர் 18 பந்துகளில் […]

You May Like