fbpx

பந்தை எடுத்ததற்காக பட்டியலினத்தவரின் சிறுவன் கட்டைவிரலை துண்டித்த கொடூரம்

குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ககோஷி கிராமத்தில் உள்ள ஐடி செலியா உயர்நிலைப் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூரைச் சேர்ந்த உயர் பிரிவைக் கொண்ட சிலர் கிரிக்கெட் விளையாடியதாக தெரிகிறது. அப்போது அங்கே ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனின் கையில் இருந்த டென்னிஸ் பந்து மைதானத்திற்குள் உருண்டு ஓடியதாகத் தெரிகிறது. அதனை அந்த சிறுவன் ஓடிவந்து வேகமாக எடுத்துள்ளான். இதனால், ஆத்திரமடைந்த குல்தீப் சிங் (கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்), அந்த சிறுவனை இதுபோன்று செய்யக்கூடாது என்று கடுமையாக மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும் சாதியை குறிப்பிட்டு வசைப்பாடியதுடன், கீழ்த்தரமாகவும் அச்சுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தைகளால் சிறுவன் மிரட்சியான நிலையில், அவனது தந்தை கிர்த்தி தயாபாய் பர்மர் என்பவரின் சகோதரர் தீரஜ் பர்மர், குல்தீப் சிங் உள்ளிட்டவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு குற்றஞ்சாட்டப்பட்ட குல்தீப் சிங், ‘உனக்கு தக்கப்பாடம் புகட்டுகிறேன்’ என தீரஜ் பர்மரை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பேரில் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் குல்தீப் சிங் மற்றும் சிலர், தீரஜ் பர்மரிடம் சென்று சண்டையிட்ட நிலையில், அங்கிருந்த சிலர் அவர்களை கட்டுப்படுத்தியுள்ளனர். அவர்களின் தலையீட்டால் அந்தப் பிரச்சனை அப்போதே முடிந்துள்ளது. தீரஜ் மற்றும் சிறுவன் அங்கிருந்து வெளியேறிய நிலையில், மைதானத்திற்கு அருகில் இருந்த டீக்கடையில் கிர்த்தி தயாபாய் பர்மர் மட்டும் இருந்துள்ளார்.

கிரிக்கெட் போட்டி முடிந்ததும் குல்தீப் சிங் மற்றும் சிலர், தீரஜ் பர்மரிடம் சென்று சண்டையிட்ட நிலையில், அங்கிருந்த சிலர் அவர்களை கட்டுப்படுத்தியுள்ளனர். அவர்களின் தலையீட்டால் அந்தப் பிரச்சனை அப்போதே முடிந்துள்ளது. தீரஜ் மற்றும் சிறுவன் அங்கிருந்து வெளியேறிய நிலையில், மைதானத்திற்கு அருகில் இருந்த டீக்கடையில் கிர்த்தி தயாபாய் பர்மர் மட்டும் இருந்துள்ளார். அப்போது மாலை சுமார் 6.30 மணியளவில் குல்தீப் சிங் உள்பட உயர் பிரிவைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூர்மையான பயங்கர ஆயுதங்களுடன் வந்து கிர்த்தி தயாபாய் பர்மரை கத்தியாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பலில் இருந்த நபர் ஒருவர், கிர்த்தியின் கட்டைவிரலை துண்டித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
அபாயகரமான ஆயுதங்களால் தாக்கியது, மிரட்டல் விடுத்தது, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர், 2 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Maha

Next Post

நிவாரண தொகைக்காக ஒடிசா ரெயில் விபத்தில் கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி

Wed Jun 7 , 2023
நிவாரணத் தொகையை பெறுவதற்காக ஒடிசா ரெயில் விபத்தில் கணவர் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில், மற்றும் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது. […]

You May Like