fbpx

மீண்டும் சுங்கக்‌ கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு…! ஏப்ரல் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு…!

சுங்கக்‌ கட்டணத்தை வருடந்தோறும்‌ உயர்த்‌தி வரும்‌ மத்திய அரசைக்‌ கண்டித்து வருகின்ற 01.04.2023 அன்று, காலை 11.00 மணிக்கு தமிழகத்தில்‌ உள்ள அனைத்து சுங்கச்‌ சாவடிகளிலும்‌ மாபெரும்‌ கண்டன ஆர்பாட்டம்‌ நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நீண்ட காலமாக அதிக அளவிலான அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

Vignesh

Next Post

அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...! சென்னை வானிலை மையம் தகவல்...!

Thu Mar 23 , 2023
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]
இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like