பரிசாக வந்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அதை அவர்களின் அனுமதியின்றி எடுக்க கணவர்களுக்கு கூட உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணத்தின் போது தனக்கு சீதனமாகவும், பரிசாகவும் வழங்கப்பட்ட நகைகளை தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அமீத் மகாஜான், திருமணம், பரிசு உள்ளிட்டவற்றின் மூலம் கிடைத்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து. அதை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியே எடுக்கவும், விற்கவும், அடகு வைக்கவும் கணவன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் உரிமை இல்லை.
தங்க நகை மட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்களை மனைவியின் அனுமதியின்றி எடுத்துச் செல்லவும் சட்டத்தில் அனுமதியில்லை. திருமணமான பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றவும் கணவருக்கு உரிமை இல்லை என கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.