fbpx

எல்லாரும் ரெடியா இருங்க… 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வு…! எப்பொழுது தெரியுமா…?

10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு இன்று தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நடப்புக்கல்வியாண்டில் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக முதல் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த முதல் பொதுத்தேர்வை சந்திக்கக்கூடிய 10 ,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த இரு மாதங்களில் நடத்தப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலும் பொதுவான கேள்வித்தாள் அடிப்படையிலும் இந்த மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பருவத்தேர்வு, நாளை தொடங்கி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அட்டகாசமான அறிவிப்பு... வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்...!

Thu Aug 4 , 2022
படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தின் சோம்நாத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், […]

You May Like