fbpx

கொடூரமான சம்பவம்…! மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் கைது…!

மனநலம் குன்றிய சிறுமியை மூன்று சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

மும்பையின் காட்கோபர் பகுதியில் மனநலம் குன்றிய சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது மூன்று சிறார்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக கழிவறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

வைரலான வீடியோவை பார்த்த சிறுமியின் சகோதரர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். காட்கோபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட சிறார்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மும்பை போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான வழக்கு.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

Sun Jan 22 , 2023
பீகாரில் நடந்து வரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கியது.. இரு கட்டங்களாக நடத்தப்பட இந்த கணக்கெடுப்பில் மக்களின் சாதி, துணை சாதி, பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.. இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.. அந்த மனுக்களில் பீகார் […]

You May Like