fbpx

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்..!! மேலும் ஒரு பெண் வியாபாரி கைது..!!

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மேலும் ஒரு கள்ளச்சாராய வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கனகு மகன் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.

இதில், இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Read More : மெத்தனால் கலந்த விஷச்சாராயம், 34 பேர் பலி..! 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம் …!

English Summary

Police arrested another bootlegger in connection with the bootlegging death.

Chella

Next Post

அதிர்ச்சி..!! ஹஜ் பயணத்தில் 68 இந்தியர்கள் மரணம்..!! மொத்த எண்ணிக்கை 645ஆக உயர்வு..!!

Thu Jun 20 , 2024
The death toll of Haj pilgrims due to heat wave in Mecca has risen to 645.

You May Like