fbpx

அதிரடி அறிவிப்பு..‌.! ஆசிரியர்களுக்கு இந்த மாதம் இறுதிக்குள்..‌.! பள்ளி கல்வித்துறை உத்தரவு…!

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 32 கல்வி மாவட்டங்களின் கீழ் வரக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கருவூலத்தில் சம்பள பட்டியலை அளித்து உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில், எந்தவித காலதாமதமும் ஏற்படக்கூடாது. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இந்த மாதம் இறுதிக்குள் சம்பளம் பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#Holiday: 4 மாவட்டத்தில் வரும் 22 மற்றும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை...! அரசு அறிவிப்பு...!

Fri Nov 18 , 2022
ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ‌. ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஃபரிதாபாத், பல்வால், ஃபதேஹாபாத் மற்றும் ஹிசார் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும். […]

You May Like