fbpx

சூப்பர் ஜாக்பாட்: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கு 23% ஊதிய உயர்வு…! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வினை அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியதாவது; கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், 01.01.2020-ம் தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கையினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

சங்கங்களின் வகைப்பாட்டிற்கேற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,259 முதல் அதிகபட்சமாக ரூ.14,815 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். இவற்றின் மூலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1,675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: IBPS-RRB: மொத்தம் 8,106 காலிப்பணியிடங்கள்‌..! தமிழக அரசு சார்பில் இலவச பயற்சி வகுப்பு…! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

Vignesh

Next Post

#TnGovtJob: மொத்தம் 2,381 சிறப்பு ஆசிரியர்களுக்கு காலிபணியிடங்கள் நியமனம்...! கல்வித்துறை இயக்குநர் தகவல்...!

Sat Jul 2 , 2022
அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வியாண்டில் ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; 2,381 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் LKG,UKG மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் பணிகளை தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு […]

You May Like