இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சொந்த ஊர்களை நோக்கிக் சென்றனர். பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதால் போக்குவரத்து வசதியில் பாதிப்புகள் இருக்கும், இதனால் பயணத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல தரப்பிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய் கிழமையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பள்ளி கல்லூரிகளுக்கு வேலைநாளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறை நாட்கள் முடிந்து இன்று வழக்கம் போல பள்ளிகள் இயங்க உள்ளது.