தற்போது காலகட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்ற நிலை எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு நடைமுறை காலம் இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலின் அருகே முத்து ஜவகர்(27) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் முத்து அதே பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியிடம் தான் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை ஏமாற்றி திட்டமிட்டு கடத்திச் சென்றுள்ளனர். இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அத்துடன் மாணவியை கண்டுபிடித்து பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.