fbpx

பகீர்..!! டாய்லெட்டில் கிடந்த பாம்பு.. திடீரென கேட்ட அலறல் சந்தம்..!! கடைசியில் என்ன ஆச்சு?

தற்போதைய மழை காலத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூட பாம்புகள் வரும் தகவல்களையும், பாம்பு கடிப்பதால் பலர் உயிரிழக்கும் தகவல்களையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில் டாய்லெட் போய் கொண்டு இருந்த நபர் ஒருவரைப் பாம்பு கடித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தனத் தங்தேவனோன். இவர் தனக்கு நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தை புகைப்படங்கள், வீடியோக்கள் உடன் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட பின்னரே இந்த செய்தி பொதுவெளிக்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த ஆக.20ஆம் தேதி அன்று நடந்ததாகவும் தனத் கூறியுள்ளார். தனத் தங்க்தேவானன் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது ஆணுறுப்பில் மிகக் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.. அப்போது தான் 12 அடி மலைப்பாம்பு ஒன்று அவரது ஆணுறுப்பைக் கவ்விக் கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்து அவர் மிரண்டு போய்விட்டார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில், “கழிப்பறை உபயோகித்துக் கொண்டு இருந்த போது ஏதோ கடிப்பதை உணர்ந்தேன். வலியைத் தாங்கவே முடியவில்லை. என்ன நடந்தது என பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்போது எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அருகே இருந்த டாய்லெட் பிரஷை எடுத்து பாம்பை அடிக்க தொடங்கிவிட்டேன். தொடர்ந்து அதன் தலையில் அடித்துக் கொண்டே இருந்தேன். சில நொடிகளுக்குப் பின்னர் அது எனது ஆணுறுப்பை விட்டது.

உடனடியாக டாய்லெட்டில் இருந்து பாம்பை வெளியே எடுத்துப் போட்டேன். என்னால் வலி தாங்கவே முடியவில்லை. வாழ்நாளில் அப்படியொரு வலியை அனுபவித்ததே இல்லை. அங்கே டாய்லெட் முழுக்க ரத்தம் தெறித்தது. அப்போதும் டாய்லெட்டிற்குள் பாம்பு வந்து ஆணுறுப்பைக் கடித்ததை நம்பவே முடியவில்லை. அப்போது அந்த மலைப்பாம்பு எனது விரலையும் கடித்தது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், நல்ல வேளை அது வெறும் மலைப்பாம்பு. இதுவே நாகமாக இருந்திருந்தால் அது என்னை கொன்றிருக்கும். மலைப்பாம்பு விஷத்தன்மை உடையது இல்லை என்பதால், எவ்வித ஆபத்தும் இன்றி தனத் தப்பித்தார். வெறும் TT தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வீடு திரும்பியதாக தெரிவித்தார்.

Read more ; அப்பா – அம்மாவை மதிக்கவில்லை..!! மனைவி, மகன் கூட வரவில்லை..!! விஜய் குடும்பத்தில் இதுதான் பிரச்சனை..!!

English Summary

there has been an incident in Thailand where a snake bit a person who was going to the toilet

Next Post

TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்பு..!! ஆறு ஆண்டுகள் இவர்தான்..

Fri Aug 23 , 2024
SK Prabhakar took charge as the Chairman of Tamil Nadu Government Staff Selection Commission.

You May Like