அரசு வேலைவாய்ப்புக்கு தகுதி இருக்கின்ற படிப்புகளை நடத்துவதற்கு மட்டுமே கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிரப்பித்திருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானிய குழு அனுமதி வழங்கி நடத்தப்படும் பட்டப்படிப்புகளுக்கு மாநில உயர் கல்வித்துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். அதன்படி எந்தெந்த படிப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறதோ அந்த படிப்புகளை அரசு பணியில் சேர்வதற்கு தகுதியானதாக உயர் கல்வித் துறை அங்கீகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி துறையில் சார்பாக ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களுடைய இணைப்பில் இருக்கின்ற கல்லூரிகள் நடத்தும் படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியானதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் தகுதியற்ற படிப்புகளை நடத்தி சிண்டிகேட், செனட் மற்றும் அகாடமி கவுன்சில்களில் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.