fbpx

அச்சுறுத்தும் குரங்கு அம்மை… கேரளாவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி…

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது

கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவின் முதல் குரங்கம்மை நோயாளி பூரண குணமடைந்தார்..! சுகாதாரத்துறை அமைச்சர்

இதனிடையே ஆந்திரா மற்றும் கர்நாடகாவில், குரங்கு அம்மை அறிகுறிகளுடன் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் குரங்கு அம்மையின் நிலைமையைக் கண்காணிக்கவும், அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கவும், நோய் கண்டறிதல் வசதிகள் மற்றும் சாத்தியமான தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்தவும் ஒரு பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.. கடந்த 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 30 வயது நபர் கேரளா வந்துள்ளார்.. அவருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டிருந்தது.. இந்நிலையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதியாகி உள்ளது.. அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதனால் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது..

Maha

Next Post

“ வேலையில்லாத ஒவ்வொரு இளைஞருக்கும் மாதந்தோறும் ரூ.3,000 பணம்..” அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..

Tue Aug 2 , 2022
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு இளைஞருக்கும் மாதந்தோறும் ரூ.3,000 வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.. பாஜக ஆளும் குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சியை தவிர ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்குகிறது.. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தீவிரம் […]

You May Like