ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முடிந்தவரை வசதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். முதலில், ஓய்வூதியத்தின் போது நீங்கள் பெற விரும்பும் பணத்தை கணக்கிடுங்கள், அது உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும். அந்தத் தொகையை ஏற்பாடு செய்ய எவ்வளவு முதலீடு தேவை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, நீங்கள் விரும்பும் வருமானத்தைப் பெற பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று முடிவு செய்யுங்கள்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது குடிமக்கள் தங்கள் பணியின் போது அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவுவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். நீங்கள் NPS க்கு சந்தா செலுத்தியிருந்தால், முதலீட்டு வாகனங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அதாவது, நீங்கள் பங்குச் சொத்துக்களில் 60 சதவீதத்தையும் கடனில் 40 சதவீதத்தையும் ஒதுக்கினால், தோராயமாக 10 சதவீத வருமானத்தை வழங்கும். மாதம் 15,000 ரூபாய் செலுத்தி வந்தால் உங்களின் பணி ஓய்வு காலத்தில் 1 லட்சம் ஓய்வூதியத்தை பெற முடியும்.
நீங்கள் 30 வயதில் SIP-இல் பணத்தைப் முதலீடு செய்ய ஆரம்பித்து, 30 வருடங்கள் வரை தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், உங்கள் ஓய்வூதிய காலத்தில் அதிக பணத்தை சேமிக்க முடியும்.. உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5666 ரூபாய் SIP-இல் முதலீடு செய்தால், நீங்கள் ஓய்வுபெறும் போது 2 கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். மேலும் ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமித்த பணத்திற்காக 12 சதவிகிதம் வட்டியையும் பெற முடியும்.