fbpx

TN Agri Budget 2025 | பொருளதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம்.. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்..!!

தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது. விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன் என  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும்..

* பொருளதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்

* கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி. 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.

* வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி  உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

* 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Read more: உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி செய்தால் மட்டும் போதுமா..? இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..

English Summary

TN Agri Budget 2025 ; Tamil Nadu 2nd place in economy.. Minister M.R.K. Panneerselvam is proud..!!

Next Post

TN Agri Budget | 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

Sat Mar 15 , 2025
TN Agri Budget | Accidental death compensation for landless farmers increased to Rs. 2 lakhs..!! - Minister M.R.K. Panneerselvam

You May Like