fbpx

மீண்டும் தொடங்கிய செருப்பு அரசியல்…! அமைச்சர் PTR-க்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி…!

சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வீரமரணமடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த PTR-க்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், உங்கள் முன்னோர்களின் முதலெழுத்துக்களுடன் மட்டுமே வாழும் நீங்களும் உங்கள் கூட்டாளிகளும், பெருமையுடன் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் சுயமாக உருவாக்கப்பட்ட மகனை ஒரு நபராக ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரிய பரம்பரை மற்றும் வெள்ளிக் கரண்டியில் பிறந்ததைத் தவிர இந்த ஜென்மத்தில் பயனுள்ளதைச் செய்திருக்கிறீர்களா…? நீங்கள் அரசியலுக்கும் எங்கள் மாநிலத்துக்கும் வந்தது ஒரு சாபக்கேடு. எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்‌. இறுதியாக, என் செருப்புக்கு இருக்கும் தகுதி கூட உங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இன்று இந்த 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும்...! சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவல்...!

Thu Sep 1 , 2022
தமிழகத்தில் ஒரு மானம் தேதி வரை கனமழைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. தென்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக […]

You May Like