fbpx

#Tn Govt: குழந்தைகளை பெறும்‌ அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 270 நாட்கள்‌ குழந்தை பராமரிப்பு விடுப்பு…! தமிழக அரசு அரசாணை…!

கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு 270 நாட்கள்‌ குழந்தை பராமரிப்பு விடுப்பு

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம்‌ ஆண்டிற்கான சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை மானியகோரிக்கையின்‌ போது 21.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்‌ மாற்று கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகள்‌ பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு மாற்று கருவறை தாயின்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு, பச்சிளம்‌ குழந்தைகளை மிகுந்த கவனத்துடன்‌ பராமரிப்பதுடன்‌ அவர்களின்‌ உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாட்கள்‌ குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்‌ என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சமூகப்‌ பாதுகாப்பு பாதுகாப்பு இயக்குநரின்‌ கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்றும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்‌ 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில்‌ காணப்படும்‌ மகப்பேறு காலத்தில்‌ ஏற்படும்‌ உடல்‌ திறன்‌ இழத்தல்‌ மற்றும்‌ தேறுதல்‌ போன்ற சிரமங்கள்‌, மாற்று கருவறை மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு நேர்வதில்லை என்பதனை கருத்தில்‌ கொண்டும்‌, மாற்று கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு, பச்சிளம்‌ குழந்தைகளை மிகுந்த கவனத்துடன்‌ பராமரிக்க ஏதுவாக தத்தெடுக்கும்‌ பெற்றோர்களுக்கு வழங்கப்படும்‌ தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு 270 நாட்கள்‌ குழந்தை பராமரிப்பு விடுப்பு நிபந்தனைகளுக்குட்பட்‌டு வழங்கி ஆணையிடுகிறது.

Vignesh

Next Post

“ சுதந்திரம் அடைந்த போது பலருக்கு இந்தியா மீது சந்தேகம் இருந்தது.. ஆனால்...” பிரதமர் மோடி உரை..

Mon Aug 15 , 2022
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இந்திய விடுதலை போராடத்தின் வரலாறு மிக நீண்டது.. நாடு இரண்டாக பிரிக்கப்பட்ட போது மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.. ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்கு கொண்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது.. மகாத்மா காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், […]
பாஜகவுக்கு அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது.! இதே ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்.! - முரசொலி

You May Like