fbpx

ஜாலி…! நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! எந்தெந்த மாவட்டத்தில்…?

சேலம் மாவட்டத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18, ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு நாளை, சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகின்ற சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, திருப்பூர் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, நாளை, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Tomorrow is a holiday for all schools and colleges

Vignesh

Next Post

அடுத்த இயற்கை பேரழிவு!. மேகவெடிப்பால் 5பேர் பலி!. 50 பேரை காணவில்லை!. உருக்குலைந்த இமாச்சல்!

Fri Aug 2 , 2024
Himachal Pradesh Cloudburst: 5 dead, over 50 missing; massive search and rescue ops launched

You May Like