fbpx

முகம் பளபளப்பாக… எலுமிச்சை சாறுடன் இந்த பொருளை கலந்து பயன்படுத்தி பாருங்க.!

ஒவ்வொருவருக்கும் தங்களது சருமம் மற்றும் முக அழகை பொலிவுடன் வைக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். அதற்காக அழகு நிலையம் சென்று நம் பணத்தை செலவு செய்கிறோம். எளிமையாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நம் முக அழகை பொலிவுடனும் பளபளப்பாக வைத்திருக்க உதவும் சில அழகு குறிப்புகளை பார்ப்போம்.

நாம் உணவாக பயன்படுத்தப்படும் எலுமிச்சை பல வைட்டமின்களையும் மினரல்களையும் கொண்டிருக்கிறது. இது நம் உடலுக்கு பல நன்மைகளை தருவதோடு சரும அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது . எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஏ,இ,சி அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. மேலும் இதில் கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் மக்னீசியம் போன்ற தாதுக்களும் அதிக அளவில் நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.

இந்த எலுமிச்சம் பழச்சாறை எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து பயன்படுத்தும் போது நமது முக அழகிற்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் இதில் இருக்கக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்பு முகப்பரு போன்றவை வராமல் தடுக்கிறது. எலுமிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து சருமம் உலராமல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

முகத்தில் இருக்கும் கருமையை போக்குவதற்கு நம் சமையல் அறையில் இருக்கும் எலுமிச்சை பழ சாறுடன் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் போது நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சை பழச்சாறில் சர்க்கரை கலந்து அதை கருமை உள்ள இடங்களில் தொடர்ந்து தேய்த்து வர கருமை நீங்கி முகம் புது பொலிவுடன் ஜொலிக்கும்.

Kathir

Next Post

ரேஷன் அட்டையில் பிரச்சினையா...? வரும் 18-ம் தேதி நடக்கும் சிறப்பு முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Thu Nov 16 , 2023
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 18.11.2023 அன்று காலை 10.00 மணிக்கு. காஞ்சிபுரம் வட்டத்தில் புஞ்சையரசந்தாங்கல், உத்திரமேரூர் வட்டத்தில் காவனூர் புதுச்சேரி, வாலாஜாபாத் வட்டத்தில் தேவரியம்பாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் மேட்டுப்பாளையம், குன்றத்தூர் வட்டத்தில் திருமுடிவாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப […]

You May Like