fbpx

கடற்கரையில் உல்லாச குளியல் போட்ட நண்பர்கள்.! ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி.!

மகிழ்ச்சியாக நண்பர்களுடன் சென்ற மாணவர்களை அலை இழுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டில் 6 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அங்குள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிக்கு இந்த 6 நண்பர்களும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள்.

அச்சமயத்தில் கடற்கரை அலையில் நண்பர்கள் 6 பேரும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு பெரிய கடல் அலை உயரமாக எழும்பி அவர்களை நோக்கி வந்தது. இதில் சஞ்சித் மற்றும் திலக்சன் என்ற 2 மாணவர்கள், ராட்சத அலையில் சிக்கிக் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள், மற்றும் அங்கிருந்தவர்களும் சேர்ந்து நீண்ட நேரமாக தேடிப் பார்த்தும் அந்த 2 பேரும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து, இந்த தகவல் அறிந்து விரைந்து சென்ற நீலாங்கரை பகுதி கடலோர போலீசார் காணாமல் போன 2 கல்லூரி மாணவர்களை அவர்களும் தேடிப் பார்த்தனர்.

தொடர்ந்து வெகு நேரமாக தேடியும் அந்த 2 பேரும் கிடைக்காததால் போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றனர். அந்த இரு கல்லூரி மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டதில் ஒரு மாணவன் திலக்சன் உடல் கரையொதிங்கி உள்ளது.

மேலும் இன்னொரு மாணவன் காணவில்லை. இச்சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

இதற்கும் கட்டணமான? எலான் மஸ்க்கின் ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் பயனாளர்கள்.!

Wed Nov 2 , 2022
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக முக்கிய பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை சில நாட்களுக்கு முன் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த பராக் அகர்வால் மற்றும் ட்விட்டரின் முக்கிய தலைமை நிர்வாகிகளை சமீபத்தில் நீக்கினார். To all complainers, please continue […]

You May Like