fbpx

வாரணாசியில் பயங்கரம்…!நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து…!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் மக்கள் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றாலும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தீயில் கருகி நாசமானது. இந்த நட்சத்திர ஹோட்டல் நகரத்தின் ஸ்ரீ நகர் காலனியில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதி‌.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடியதால் ஹோட்டலில் இருந்து அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகள் நீண்ட போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தரப்பில் உள்ள அளிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை‌. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா கவலையே வேண்டாம்….! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு குஷியில் இளைஞர்கள்….!

Wed Sep 6 , 2023
தற்போது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 90ஸ் கிட்ஸ் என்று சொல்லப்படும் 90களில் பிறந்த நபர்கள் திருமணம் ஆகாமல், மன உளைச்சலில் இருந்து வருகிறார்கள் 2k கிட்ஸ் என்று சொல்லப்படும் 2000 களில் பிறந்தவர்களுக்கு கூட திருமணம் ஆகி விடுகிறது. ஆனால், இந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆவது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் ஒருபுறம் நமக்கு பெண் கிடைக்கவில்லையே, திருமணம் ஆகவில்லையே என்று கவலையில் இருந்து வரும் நிலையில், அவர்களை குஷிப்படுத்தும் […]

You May Like