fbpx

ராவணன், மண்டோதரியின் திருமணம் நடைபெற்ற கோயில்..! வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டிய கோயில்.! எது தெரியுமா.?

தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உத்திரகோசமங்கை ரயில் பாதையை தாண்டி ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உத்தரகோசமங்கை திருக்கோயில். உலகிலேயே முதன் முதலில் தோன்றப்பட்ட கோயில்தான் திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோயில் ஆகும். தமிழ்நாட்டின் புனித தலங்களில் மிகச்சிறப்பான கோயிலாக கருதப்பட்டு வருகிறது.

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோயிலான உத்திரகோசமங்கையில் தான் முதன் முதலில் ஆருத்ர தரிசனம் கொண்டாடப்பட்டது. நவகிரகங்களை பற்றி அறியாத காலகட்டத்தில் சூரியன் சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களை மட்டும் வைத்து வழிபட்டு வந்தனர். உத்திரனான சிவபெருமான் தனது மனைவியான  பார்வதி தேவிக்கு( மங்கைக்கு) வேத ரகசியங்களை கற்பித்த இடம்  இது தான். இதனாலேயே இந்த இடத்திற்கு உத்திரகோசமங்கை என்ற பெயர் வர காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

5100 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த ராமாயண காலத்திலும் உத்தரகோசமங்கை திருக்கோயில் இருந்து வந்ததாக வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் அரசனான ராவணன் எனும் இலங்கேஸ்வரன் உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வந்து தரிசனம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் ராவணன் மற்றும் மண்டோதரியின் திருமணம் இக்கோயிலில் தான் நடைபெற்றது என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் இக்கோயிலில் ஒரு நாளில் மூன்று முறை அபிஷேகம் நடக்கும். திருவாதிரை நாள் தான் சிவனை வழிபட சிறப்பான நாட்கள் என்பதால் அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக சிவ பக்தர்கள் இக்கோயிலில் வந்து மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

Baskar

Next Post

இந்த நோய்கள் இருப்பவர்கள் வயாகரா மாத்திரையை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.! ஏன் தெரியுமா.!?

Sat Jan 20 , 2024
தற்போதுள்ள காலகட்டத்தில் பல ஆண்கள் உடலுறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க மாத்திரைகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். ஆனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் போது மோசமாக பின் விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. மேலும் ஒரு சில நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் வயாகரா மாத்திரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன நோய்கள் என்பதையும், வயாகரா மாத்திரையின் செயல்பாடுகள் குறித்தும் பார்க்கலாம்? […]

You May Like