fbpx

வனிதாவை காதலித்து திருமணம் செய்ய ஆசை!… பெண்களை காதலில் விழ வைக்க தனி strategy-ஐ பயன்படுத்தும் பிரதீப்!

பிக்பாஸ் வனிதாவை காதலித்து திருமணம் செய்ய ஆசை என்று தற்போதைய பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் பிரதீப் ஆன்டனி கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெறுப்பு, காதல் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 25 ஆவது நாளை எட்டியுள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 பேர் எலிமினேட் ஆகிவிட்டனர். பவா செல்லதுரை அவராகவே உடல்நிலையை கருத்தில் கொண்டு வெளியேறிவிட்டார். பொறுமையை கடைப்பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் பிரதீப் ஆன்டனி. இவர் கவினுடைய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே.

பூர்ணிமா இந்த வார கேப்டன். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்துவிட்டு யாருடையது பிடித்திருக்கிறதோ அவர்களுக்கு லைக்கும் பிடிக்காத வீடியோக்கும் டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும். அதில் பிரதீப், ஜோவிகா வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட வீடியோக்களை பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது ஜோவிகாவுக்கு லைக் கொடுக்கார். அப்போது ஜோவிகா கண் கலங்கும் ப்ரோமோ வெளியானது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நண்பர் கவினை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் பிரதீப், வனிதாவுடன் நடத்திய உரையாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ஜோவிகா ஆர்மி வைரலாக்கி வருகிறது.

அந்த வீடியோவில் வனிதாவிடம் பிரதீப் ஆன்டனி, “உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகாம இருந்து, நீங்கள் சின்ன பொண்ணா இருந்திருந்தா நான் நிச்சயமாக உங்களை காதலித்திருப்பேன். உங்களை மாதிரி ஒரு ஆள் கூட இருந்தா நான் கண்டிப்பாக இந்த உலகத்தையே ஜெயிச்சுருவேன்” என்கிறார். உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரின், இப்போ மட்டும் என்ன அவங்க சின்ன பொண்ணுதான் என்கிறார். அதற்கு வனிதா “ஏம்மா நீ வேற ” என்கிறார். பிக்பாஸ் வீட்டில் கவின் பயன்படுத்திய காதல் உத்திகள் எல்லாம் என்னுடையது என்றே கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பெண்களை காதலில் விழ வைக்க தனி strategy எல்லாம் பயன்படுத்திறியா என வனிதா கேட்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

பாம்பை முகத்தில் கடிக்கவிடும் பழங்குடியினர்!… ஏன் தெரியுமா?… திருவிழாவாக கொண்டாடப்படும் வினோதம்!

Fri Oct 27 , 2023
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாம்பை விட்டு கடிக்க விடும் வினோத திருவிழாவை கொண்டாடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. நமக்கு பாம்பை கண்டாலே தானாகவே நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பாம்பிற்கு பயப்படாதவர்களே இருக்க முடியாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சங்கர்தா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் […]

You May Like