fbpx

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும்…! கடைகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் இடைவிடாத கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, 53 வயதான பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகரத்தில் சுமார் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும், வெள்ளத்தால் சேதம் அடைந்த பெரிய கடைகள் மற்றும் சிறிய சாலையோர நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 10,000 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நகரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வழங்கியதால், அனைத்து அவசரகால மற்றும் மீட்புக் குழுக்களும், நிர்வாக அமைப்புகளும் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாக்பூரில் மழை வெள்ளம் பாதித்த இடத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எதிர்பாராத கனமழை பெய்துள்ளதாக கூறினார். நகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்க நீண்ட கால நடவடிக்கைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

Vignesh

Next Post

செம வாய்ப்பு...! SBI வங்கியில் 6,160 காலிப்பணியிடங்கள்...! விண்ணப்பிக்க கடைசி நாள்...?

Sun Sep 24 , 2023
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Apprentices பணிகளுக்கு 6160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 20 முதல் 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Degree முடித்தவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு […]

You May Like