fbpx

சமூக வலைத்தளத்தில் மதங்கள் குறித்த அவதூறு.! இளைஞர் மீது நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம்.!

பிறமதங்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி தவறாக சித்தரித்தும் பிற மதங்களை அவமதிக்கும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டதாக முகமது சுஹைல் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் விசாரணையில் சென்னை பல்லாவரம் பகுதி மீனாட்சி நகரை சேர்ந்த முகமது சுஹைல் என்ற நபர் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மேலும் குற்றச்செயல்களுக்காக அவர் பயன்படுத்திய செல்போனும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு அந்த நபர் காவல் துறையின் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவு செய்ததாக அந்த நபர் மீது உனக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக உடனுக்குடன் புகார் அளிக்கும்படி காவல்துறையினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Post

வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்..!! இனி யாரும் அப்படி பண்ண முடியாது..!!

Fri Dec 1 , 2023
வாட்ஸ் அப்பில் Locked Chat அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி அறிமுகப்படுத்தப்பத்தி உள்ளது மெட்டா நிறுவனம். வாட்ஸ்ஆப்செயலியில் புது புது அப்டேட்களை அந்நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது லாக்டு சாட் அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம். சீக்ரெட் […]

You May Like