அரியலூர் மாவட்டம் மகிமைபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த அலமேலு என்பவரின் முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது வாலிபர் ஒருவர் தான் அணிந்திருந்த பேண்டால் தூக்கு போட்டு, நிர்வாண நிலையில் இறந்துள்ளார்.
ஆடு, மாடு மேய்க்க அந்த வழியாக சென்றவர்கள் அதனை பார்த்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் மற்றும் முகவரி எதுவும் தெரியாததால் போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரை பற்றி விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.