fbpx

#சென்னை :தவறான சிகிச்சையால் தனது காலை இழந்த இளைஞர்..!

சென்னை மாநகர பகுதியில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் பெயிண்டர் விஜய் தனது மனைவி வேளாங்கண்ணி மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். சென்ற செப்டம்பர் மாதம் பார்க் ஒன்றில் தனது குழந்தையுடன் விளையாட அழைத்து சென்றுள்ளார். 

அப்போது தவறி கீழே விழுந்ததில் விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ராயப்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது எனவே கட்டுப்போட வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் நண்பர் ஒருவரின் உதவியோடு வடபழனிக்கு சென்று புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு 4 கட்டுக்கள் போட்டால் குணமாகிவிடும் என்பதை நம்பி கேட்ட பணம் அளித்து கட்டுப்போட்டு கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து காலில் ரத்தம் கசிந்து கொண்டே இருந்ததால், அச்சமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து காலினை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து விஜயின் கால் அகற்றப்பட்டுள்ளது. 

Baskar

Next Post

#தர்மபுரி :பிறந்த 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஏரியில் மிதப்பு..! 

Thu Dec 1 , 2022
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள நாய்க்கனூரில் இருக்கும் ஏரி வழியாக காலை நேரத்தில் சில விவசாயிகள் தனது விளை நிலங்களுக்கு சென்றிருக்கின்றனர்.இந்த நிலையில் அந்த ஏரியில் குழந்தையின் உடல் ஒன்று மிதப்பதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.  இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்களின் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொப்புள் கொடியுடன் தண்ணீரில் மிதந்த குழந்தையை மீட்டு உடலை அரசு […]

You May Like