fbpx

எனக்கே விபூதி அடிக்க பாத்தியா.! மாமியாருடன் கள்ள உறவு.! மருமகனை தீர்த்துக் கட்டிய மாமனார்.!

மாமியாருடன் தகாத உறவிலிருந்து மருமகன் கழுத்து நெறித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நாடகமாடிய மாமனாரை கைது செய்து விசாரித்ததில் அவரிடமிருந்து பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபக்கீரப்பா. இவர் தனது மகளின் கணவரான ரோகக் கண்ணாவர் என்பவருடன் பைக்கில் செல்லும் போது விபத்து நடந்து தனது மருமகன் உயிரிழந்ததாக காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த நபர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஃபக்கீரப்பா மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்ததில் தனது மருமகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தனது மகளின் கணவர் தனது மனைவியுடனே தகாத உறவில் இருப்பதாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பைக்கில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு விபத்து நடந்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மாமியாருடன் தகாத உறவில் இருந்ததாக மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

17 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்முறை.! 65 வயது முதியவர் போக்சோவில் கைது.!

Sat Dec 30 , 2023
திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கர்ப்பமான சம்பவத்தில் 65 வயது முதியவர் மற்றும் அரசு மருத்துவமனையின் செவிலியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி எருக்காம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் […]

You May Like