கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெயின்டர் மணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் மற்றும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கூலித் தொழிலாளிகளான தம்பதியினர், மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். இதை கவனித்த மனிஸ் வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் கொடுத்துள்ளார்.
அப்போது, திடீரென குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். இதை பெற்றோர் வந்ததும் சிறுமி அழுதவாறே கூறியுள்ளார் . இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் மணிஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணீஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.