fbpx

கற்பழிக்கப்பட்ட 22 வயது இளைஞர்.! கடத்திய 2 பேர் கைது.! 4 பேருக்கு வலைவீச்சு.!

தஞ்சாவூர் அருகே 22 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் தெருவை சேர்ந்தவர் 22 வயது இளைஞரான விஜய். இவர் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் காலியான மது பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி வழக்கம் போல பட்டிதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தால்.

அப்போது மது அருந்த வந்த சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), பரணி (31) மற்றும் சரவணன் (32) மது போதையில் விஜய்யை தங்களது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். பின்னர் சூலமங்கலம் சென்று ஆள் இல்லாத பகுதியில் வைத்து அவரை கட்டாயப்படுத்தி தன் பாலின உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது முகத்தை கல்லால் சிதைத்து கொடூரமாக அடித்து படுகொலை செய்துள்ளனர்.

இந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஐயம்பேட்டை காவல்துறையினர் இறந்த விஜயின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் விக்னேஷ் மற்றும் அவருக்கு தங்க உதவி புரிந்த அருண் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சரவணன் பரணி ஆகிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! பருப்பு விலை அதிரடி உயர்வு..?

Sat Dec 2 , 2023
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதுமட்டுமின்றி மத்திய – மாநில அரசுகளின் நிவாரண உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல், கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாக […]

You May Like