fbpx

ஸ்ரீவில்லிபுத்தூர்| 17 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை…..! மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகை பற்றி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ஸ்ரீரங்கம் (35) இவருடைய கணவர் கார்த்தி இந்த தம்பதிகளுக்கு சூரியபிரகாஷ் 19 என்ற மகனும் மஞ்சுளாதேவி 17 என்ற மகளும் இருக்கின்றனர் கருத்து வேறுபாடு காரணமாக, இன்று தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வந்தனர் தன்னுடைய குழந்தைகளுடன் முத்து ஸ்ரீரங்கம் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முத்து ஸ்ரீரங்கத்திற்கு அவருடைய தங்கையின் கணவர் ஈஸ்வர அய்யனார் (35) என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கி வந்துள்ளார். இதற்கு முத்து ஸ்ரீரங்கம் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி இரவு மது போதையில் வந்த ஈஸ்வர அய்யனார் முத்து ஸ்ரீரங்கத்தை அரிவாளால் வெட்டி உள்ளார்.

இதனை தடுக்க முயன்ற அவருடைய மகள் மஞ்சுளா தேவிக்கும் வெட்டு விழுந்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை உறவினர்கள் மீது அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி மஞ்சுளா தேவி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மல்லி காவல்துறையினர் ஈஸ்வர அய்யனார் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கேது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது நடுவில் ஜாமீனில் வெளியே வந்த ஈஸ்வர அய்யனார் சென்ற வருடம் மார்ச் மாதம் 23ஆம் தேதி முத்து ஸ்ரீரங்கம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது இந்த வழக்கில் சாட்சியம் வழங்கினால் உன்னையும், உன் மகனையும் வெட்டுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் பேரில் மல்லி காவல்துறையினர் ஈஸ்வர அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த 2 வழக்குகளிலும் ஈஸ்வர அய்யனாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் 26000 ரூபாய் அபராதம் நினைத்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார்

Next Post

சைதாப்பேட்டை அருகே…..! பைக்கில் வந்து பெண்ணின் நகையை பறித்த பிரபல கொள்ளையன் அதிரடி கைது……!

Fri Jun 16 , 2023
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி(35) என்பவர் கடந்த 12ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சைதாப்பேட்டை கேபி கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பூங்கொடியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துள்ளார். ஆனால் நகையை பூங்கொடி பிடித்துக் கொண்டதால், இருசக்கர வாகனத்தை ஒட்டியபடியே அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளி வழிப்பறி கொள்ளையன் அவருடைய […]

You May Like