தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்கின்ற வன்னிய ராஜ் இவருடைய மகன் கணேசன் (24) இவர் டிஎம்பி காலனி பகுதியில் நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கணேசனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கணேசனை கொலை செய்த அந்த மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக, இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் விதத்தில் அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.