sssssssssசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன் தினம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து விமானத்திற்குள் அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார்( 50) என்பவர் திருச்சி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவருடைய உடைமைகளை ஸ்கேனர் மூலமாக பரிசோதித்தனர். இவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர் கொண்டு வந்த பையைத் திறந்து பார்த்தனர்.
அப்போது அந்த பையில் ஏழு துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து, அவரை சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தொழிலதிபரான அவர், அவருடைய பாதுகாப்புக்காக முறைப்படி உரிமம் பெற்று கைதுப்பாக்கி வைத்திருப்பதும், அந்த துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான துப்பாக்கி குண்டுகள் தான் இவை என்பதும் தெரியவந்துள்ளது.
அதோடு, அவற்றை விமானத்தில் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரம் தெரிந்தும் தவறுதலாக கார் ஓட்டுநர் தோட்டாக்கள் அடங்கிய பையை மாற்றி வைத்து விட்டதாக அந்த தொழில் அதிபர் காவல் துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அவரிடம் விளக்க கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு உண்டானது.