இந்திய மாணவர்களுக்கு கனடா நீண்ட காலமாக உயர்கல்விக்கான முக்கியமான தேர்வாக இருந்துவருகிறது. அமெரிக்கா விசா விதிகளை கடுமைப்படுத்தி வரும் நிலையில், கல்விச் செலவுகள் அதிகரித்து, நிலைத்தன்மையற்ற சூழ்நிலைகள் உருவாகி வரும் போது, கனடாவின் திறந்த அணுகுமுறை, பாதுகாப்பான சூழல், வேலை உரிமைகள், மற்றும் படிப்புக்குப் பிறகு கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை அதை ஈர்க்கத்தக்கதாக மாற்றுகின்றன. 2025 ஆம் ஆண்டில் ApplyBoard நடத்திய ஆய்வில், வெளிநாட்டில் படிக்க விருப்பமுள்ள இந்திய மாணவர்களில் […]

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வயதான அமெரிக்கர்கள் மத்தியில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதான போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை காட்டுகின்றன. அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்தப் பழக்கம் மது மற்றும் புகையிலை போதைப் பழக்கத்தை விடவும் அதிகமாக பரவியுள்ளது. இது கட்டாய உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் தீவிரமான மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் செயற்கை சேர்க்கைகள் நிறைந்த இந்த […]

தமிழ்நாடு அரசால் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டாலும், இன்னும் ஏராளமானோருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தகுதியுடைய பெண்கள் மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் […]

கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மற்றும் குஜராத் மாநிலகளுக்கு மத்திய அரசின் கூடுதல் உதவியாக 707.97 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.மேலும் இந்த உயர்நிலைக்குழு ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் […]

உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில், பலர் தங்கள் சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர், குறிப்பாக உணவில் சேர்க்கப்படும் சர்க்கரைகள் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நுகர்வை நிர்வகிப்பதில் மிக முக்கியமான தடைகளில் ஒன்று, அன்றாட உணவுகளில் காணப்படும் மறைக்கப்பட்ட சர்க்கரைகளை அடையாளம் காண்பது, அவை பெரும்பாலும் வெவ்வேறு பெயர்கள் அல்லது […]

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார். பி.எம்.கிசான் என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறும் வகையில், இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை […]