ஆசியக் கோப்பை தொடங்க இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஜெர்சி ஸ்பான்சராக இருந்த Dream11 நிறுவனம், தனது ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம், கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா’ (Promotion and Regulation of Online Gaming Bill) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டது. அந்த மசோதா ஆன்லைன் ஃபாண்டஸி ஸ்போர்ட்ஸ் […]

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுரையில் 2-வது மாநில மாநாடு நடத்தி முடித்தப் பின் கொண்டாட்டத்தில் உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் பேசியது பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து இந்த மாநாட்டில் நேரடியாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்தார். அதேபோல், திமுக – பாஜகவை தொடர்ந்து தற்போது […]

இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியம் மீது மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உடல் எடையை கட்டுப்படுத்தவும், தசைகள் வலிமையடையவும், மனச்சோர்வை குறைக்கவும் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். உண்மையிலேயே, ஒழுங்கான உடற்பயிற்சி வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உடற்பயிற்சி செய்வது மட்டுமன்றி, அதற்குப் பிறகு எதைச் சாப்பிடுகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி முடிந்ததும் உடல் சோர்வாகி, உடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது […]

இன்றைய நமது வாழ்க்கை முறை காரணமாக, எதிர்காலத்தில் மனிதர்கள் முடி இல்லாமல் போகலாம், மேலும் நான்கு உடல் உறுப்புகளை கூட இழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது நவீன வாழ்க்கை முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடுமையான பரிணாம மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நவீன வசதிகள் நமது உடற்கூறியல் அமைப்பை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக கவனம் செலுத்துகின்றனர்.ஒரு காலத்தில் உயிர்வாழ்வதற்கு அவசியமானதாக இருந்த […]

வயது வந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உரிமையை உணர்த்தும் விதமாக சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 18 வயதைக் கடந்த ஒரு இளம்பெண், ஏற்கனவே திருமணமாகி இருந்த ஆணுடன் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த இளம்பெண்ணை மீட்டு வர காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் […]

விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தர்களின் மனங்களில் ஆனந்தம் மற்றும் பக்தி உணர்வை ஊட்டும் திருநாளாகும். இந்த நாள், விநாயகர் தமது அவதாரத்தை எடுத்ததாகக் கருதப்படும் பரம் புனிதமான தினம். இந்நாளில் விநாயகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த வழிபாடு பலர் நினைப்பது போல் எளிதானதும், தோற்றத்துக்கேற்ப செய்வதாலே போதுமானதும் அல்ல. முறையாகவும், சாஸ்திர விதிகளை பின்பற்றியும் வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கான தயாரிப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட […]

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி என்ற பகுதியில், மனைவியைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிற உறுப்புகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றித் திரிந்த பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியின் மெய்னகுரி பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், மாவட்டம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் ராய் என்ற நபர், தனது மனைவி தீபாலி ராயைக் கொன்றது மட்டுமல்லாமல், […]

கடந்த காலத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் தீர்க்கதரிசனங்களை நம்புகிறார்கள்., குறிப்பாக பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகளை அப்படியே நம்புகின்றனர்.. தனது 12 வயதில் பார்வையை இழந்த அவர், தனது கணிப்புகளுக்கு பிரபலமானவர். உலகின் முக்கிய நிகழ்வுகளை அவர் துல்லியமாக கணித்துள்ளார்.. அதே நேரம் ராசிப்பலன்களையும் அவர் கணித்துள்ளார்.. பாபா வங்காவின் கணிப்பின் படி, சில ராசிக்காரர்கள் […]

அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு […]