இந்தியாவில் பாராசிட்டமால் என்று அழைக்கப்படும், குழந்தை பருவ தடுப்பூசி பயன்பாடு மற்றும் கர்ப்ப கால வலி நிவாரணி டைலெனால்(Tylenol) என்ற மருந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் ஆட்டிசத்துடன் தொடர்புடையதால் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம் என்று டிரம்ப் கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அதோடு, அந்த மருந்துகளை ஆட்டிசம் விகிதங்களுடன் தொடர்புபடுத்தி […]

தேசிய கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 2025 ஜூன் 2, முதல், விண்ணப்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு கல்வி உதவித்தொகை […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர், சினிமாவை தாண்டி அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். சூர்யாவிடம் அந்தோணி என்பவர் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய […]

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற […]

வேலைக்காக துபாய் சென்ற கணவன் நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் மாமனாருடன் உல்லாசமாக இருந்து வரும் இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரலாக பரவும் 31 வினாடி வீடியோவில் இளம்பெண் தனது அறைக்குள் அமர்ந்தபடி செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கை கதையை விளக்குகிறாள். “என் மகள் மிகவுன் சிறியதாக இருக்கும்போது என் கணவர் என்னை விட்டு சென்றார். நான் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் நீண்ட […]

கோயிலுக்கு செல்வது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, முழுமுதற் கடவுளான விநாயகரை தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொண்டு வணங்க வேண்டும். பெருமாள் கோயிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை தரிசித்த பின்னரே பெருமாளை வணங்க வேண்டும். ஆனால், சிவன் கோயிலுக்கு செல்லும் முறை சற்று வேறுபட்டது. சிவன் கோயிலில் […]

தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன். ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான். தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் […]

தூக்கம் என்பது நல்ல ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று கருதப்படுகிறது. மருத்துவ சமூகம் அதன் முக்கியத்துவத்தையும், தூக்கமின்மை பல சுகாதார நிலைகளை எவ்வாறு தூண்டுகிறது என்பதையும் அடிக்கடி வெளிப்படுத்துகிறது. இந்தநிலையில், நரம்பியல் துறையில் 30+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரசாந்த் கட்டகோல், செப்டம்பர் 22 அன்று இன்ஸ்டாகிராம் பதிவில், மோசமான தூக்கத்தால் மூளையில் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இன்றைய […]

வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மேற்கு வங்கம் மற்றும் அதையொட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று வலுகுறையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் […]

2026-ல் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று குன்னூர் தொகுதியில் பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? இதே […]