உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 8) காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் தெற்கு காஷ்மீரில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. […]

பீகாரின் ராஜ்கிரில் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 நடைபெற்றது, இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் கொரியா இடையே நடைபெற்றது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஹாக்கி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது மற்றும் கொரியாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், இந்திய ஹாக்கி வீரர்கள் மீதும் ஏராளமான பணம் மழை பொழிந்தது. ஹாக்கி இந்தியா அணிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் பரிசுத் தொகையாக என்ன […]

ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள துரகபாலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நோய் பரவி வருகிறது. இரு மாதங்களில் மட்டும் மர்ம நோயால் […]

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 20 வயது இளம்பெண் ஒருவரை அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கொண்டாட்டம் முடிந்ததும், நண்பர்களான சந்தன் மாலிக் மற்றும் தீப் ஆகியோர் அந்தப் பெண்ணை ரெஜண்ட் பார்க் பகுதியில் […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஒரே ஒரு இறப்பு மட்டுமே நிகழ்ந்த நிலையில், இவ்வளவு குழிகள் எதற்காக தோண்டப்பட்டன என்பது குறித்து மக்கள் மத்தியில் பீதியும் எழுந்தது. பொதுவாக, ஒருவர் இறந்த பிறகுதான் அவரது உறவினர்களோ அல்லது மயானப் பொறுப்பாளர்களோ குழி தோண்டி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். […]