காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜீன் 2025 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க […]

இஸ்ரேல் -ஈரான் போர் தொடர்பான நேரலை நிகழ்ச்சியின் போது அலுவல கட்டிடத்தின் மீது இஸ்ரேல் படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். கட்டிட கூரை சேதமடைய தொடங்கியதை அடுத்து நெறியாளர் உடனடியாக ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு தெஹ்ரானில் உள்ள ஈரானின் அரசு தொலைக்காட்சி IRIB கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. செய்தி தொகுப்பாளர் ஒருவர் இஸ்ரேல் மீதான நேரடி விமர்சனத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக […]

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். ஓரிரு இடங்களில் 22-ம் […]

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்; அலுவலகங்கள் / பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற / பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பணிக்காலத்திற்கு அகத்தணிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓய்வு பெற்ற சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள்/தலைமை […]

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த சண்டை தொடர்ந்து அதிகரித்தால், இந்தியாவில் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது. இப்போதைக்கு, இந்த மோதல் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் சண்டை நீண்ட காலம் தொடர்ந்தாலோ அல்லது பிற நாடுகளும் இதில் […]

நகரங்களில் வேலையின்மை விகிதம் 17.2% லிருந்து 17.9% ஆக அதிகரித்துள்ளது. கிராமங்களிலும் இந்த எண்ணிக்கை 12.3% லிருந்து 13.7% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மே 2025 இல், நாட்டின் சராசரி வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக அதிகரித்தது, அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் இது 5.1 சதவீதமாக இருந்தது. இது 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது. அவர்களில் வேலையின்மை விகிதம் […]

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஐசிடி அகாடமி மூலம் திறன் பயிற்சி வழங்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐசிடி அகாடமி), மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் – கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த 7,533 ஆசிரியர்களுக்கு […]

இந்தியாவின் திருத்தல மரபில், ஒவ்வொரு சிவஸ்தலமும் தனித்துவமான வரலாறையும் ஆன்மிக மகிமையையும் தாங்கி நிற்கிறது. ஆனால் அந்த இடங்களில் சிலவே, உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயங்களைக் கொண்டுள்ளது. அந்த வரிசையில், ஆந்திரா மாநிலத்தின் பீமவரம் அருகே உள்ள யனமதுரு என்ற சிறிய கிராமம், உலகில் எங்கும் காண முடியாத ஒரு அபூர்வக் காட்சியை வழங்குகிறது. சிவபெருமான் தலைகீழாக காட்சி தரும் கோவில். புராணக்கதைகளின்படி, சம்பாசுரன் எனும் அரக்கன், பிரம்மனால் […]