வங்கியில் பணிபுரிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு சர்க்கிள் ஆபிசர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வட்ட அளவிலான அதிகாரி (CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 1,422 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியின் […]

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் […]

சென்னையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் அதன் பேட்டரிகளை திருடி, போலீசாரிடம் சிக்காமல் தப்பிவந்த திருடன், விலை உயர்ந்த நாயை திருடி, காதலிக்கு பரிசளிக்க முயன்றபோது சிக்கிக்கொண்டான். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் யமஹா ஆர்.எக்ஸ் 100 ரக இருசக்கர வாகனம், கடந்த 1ஆம் தேதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது, திருடு போனது. இதையடுத்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி பதிவுகளை […]

மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய […]

பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த இந்த வினோத செயல் மருத்துவ உலகில் சவாலாகப் பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10ஆம் தேதி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருப்பதை […]

முஸ்லீம் தனிநபர் சட்டம் தொடர்பான சட்டப் பிரச்சினையில் எந்தப் பயிற்சியும் அல்லது சட்ட அறிவியலும் இல்லாத மதகுருமார்களை நீதிமன்றங்கள் நம்பி முடிவெடுக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இஸ்லாமிய பெண்கள், குலா சட்டம் மூலம் விவாகரத்து பெற அனுமதி வழங்கக்கோரி, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தனர். அதில், நீதித்துறை அமைப்புகள் மூலம் விவாகரத்து பெறுவது இஸ்லாமியப் […]

டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் சந்தைகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வானது 0.9% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. வாகனங்களை தயாரிப்பதற்கான உதவிப் பொருட்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் நிலையான உயர்வு, இந்த குறைந்தபட்ச விலை உயர்வு கொண்டு வரும் சூழல் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் நாடு […]

நாடு முழுவதும் நாளை 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் பதினைந்தாவது சந்திர நாளான கார்த்திக் பூர்ணிமா நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது, மேலும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி நாளை இது […]

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில், ‘இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குமரிக்கடல் […]

சரோஜா பாலசுப்ரமணியன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில்; விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் […]