தருமபுரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2022- 23-ம் ஆண்டிற்கான மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டுத் திட்டம்செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இந்த மாவட்டத்தில் கால்நடை காப்பிடுசெய்ய குறியீடு நிர்ணயம் செய்து 2100 அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கால்நடையின் மதிப்பீட்டில் அதிக பட்சமாக ரூ.35000 வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். ரூ.35,000 மதிப்பீட்டிற்கு மேல் உள்ள கால்நடைகளுக்கு கூடுதல் தொகைக்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். வறுமை […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், […]
தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. “இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் உடல் நிலையும் மன நிலையும் சீராக அமைய வேண்டுமென்றால் உணவு மிக மிக அவசியம். இந்த உணவு […]
தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், இந்திய அரசின் மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016ஐ அறிவித்தது, இந்தவிதிகள் அக்டோபர் 1, 2016 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ன்கீழ், அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்- கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும் மேலும் மத்திய மாசுகட்டுபாடு வாரியத்திடம் […]
பிரபல பெண் சமூக ஆர்வலர் எலாபென் பட் காலமானார். புகழ்பெற்ற பெண் சமூக ஆர்வலர், காந்தியவாதி மற்றும் சுயதொழில் பெண்கள் சங்கத்தின் நிறுவனர் எலாபென் பட், குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் காலமானார். நல்ல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு 89 வயது. எலாபென், நிறுவிய காந்தியவாதி மற்றும் சுயதொழில் பெண்கள் சங்கம் மிகப்பெரிய பெண்கள் கூட்டுறவு மற்றும் […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் […]
பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை வெளியிட்டு பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். 2022-2023 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தமிழகத்தில் 1998-க்கு பின்னர் புதியதாக ஆவண எழுத்தர் உரிமங்கள் வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கூடுதல் ஆவண எழுத்தர்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக் கருத்தில் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்காலில் மழை விடாமல் பெய்து வருகின்றது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மரியாதை நிமித்தமாகவே ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் என பேட்டி அளித்துள்ளார். சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வந்தார். அவர் ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அங்கு அவரை சந்தித்தார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில், ’’ மேற்கு […]
சமீபத்தில் ’ஓ பாரி’ என்ற ஆல்பம் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் கடவுள் மந்திரத்தை அவமதிக்கும் வகையில் பாடல் இயக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது ஆல்பம் பாடல்களை இயக்க தொடங்கி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டார். ’ஓ பாரி’ என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்த பாடல் இந்தியில் […]