திருமணத்தடை நீங்க வேண்டும் என்றால் கன்னிப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் ரத்தம் வேண்டும் என்று மந்திரவாதி கேட்க, இதனை நம்பி ஆசிரியர் ஒருவர், தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பங்குரா என்கிற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 37 வயது ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை. இவர் தனக்கு […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
10ஆம் வகுப்பு மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று 5 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி குரு கிராம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தைக் கூறி அவரது ஆண் நண்பர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஓட்டல் அறைக்குச் சென்றதும் அங்கு மேலும் 3 பேர் இருந்துள்ளனர். இதனைப் […]
ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீரர் (ஆண்) அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்) சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர். இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நடைபெற்ற உள்ளது. தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த […]
தொடர்மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் (வெள்ளிக்கிழமை) வரை மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என […]
வங்கி ஊழியர்கள் வரும் 19ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்ட அறிக்கையில், ”வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன. இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]
திருமணத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் பழக்கமான பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோரை காதல் வலையில் வீழ்த்தி, சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரே வீட்டில் உல்லாசமாக வசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், புதுக்கடை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், பிளஸ் 2 படித்து வருகிறார். இதேபோல் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாணவியும் படித்து வருகிறார். இந்நிலையில் […]
காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் […]
இளம் ஆண், பெண் இடையே பரஸ்பர புரிதல் இருந்தால், அதனை போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதல் என கூற முடியாது என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மைனர் பெண் படித்து வந்துள்ளார். அவர் காணாமல் போனதை பள்ளி ஆசிரியை கவனித்ததை அடுத்து தாய் புகார் அளித்துள்ளார். சிறுமி தனது காதலனான உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாய் காவல் […]
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01.07.2022 முதல் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்காததோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியைக்கூட வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்களின் […]