கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கேரளாவின் சில பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் இறைச்சிக் கடைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி கே ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பண்ணையில் உள்ள பன்றிகளை கொலை செய்து புதைக்க […]

தற்காலத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றை தாண்டி இன்று இன்ஸ்டாகிராம் தான் அதிகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதன்விளைவாக ஒரு அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி டவுன் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி, கன்னியாகுமரியில் அறையெடுத்துத் தங்கி இளம் பெண் ஒருவர் 9 பவுன் மதிப்புள்ள நகைகளைத் திருடிக்கொண்டு ஓடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை […]

’15 வயதை தாண்டிய முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும், அது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது’ என பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் (26) என்பவர் கடந்த ஜூலை மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மைனர் பெண் என்பதால் சிறுமி பஞ்ச்குலா சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே, […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதியில் நிலவி வரும் நிலையில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுவை, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திராவில் பகுதிகளில் வடகிழக்கு […]

குருபூஜை விழாக்களின் போது வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான் ஜெய்ந்தி மற்றும் குருபூஜை 28-ம் தொடங்கியது. தேவர் ஜெயந்தி இன்று […]

பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.18,300 பெறலாம். உலகிலுள்ள அனைவருக்கும் பணம் என்பது எப்போதும் எந்த வயதிலும் தேவையான ஒன்று. சம்பாதிக்கும் காலத்திலேயே சிறிதளவு பணத்தை சேமித்து வைத்துக்கொண்டால் அது நமது ஓய்வுகாலத்திற்கு பின்னர் நமது எதிர்கால நிதி தேவைகளை சமாளிக்க உதவியாக இருக்கும்.  ஓய்வுகாலத்திற்கு பிறகு நீங்கள் பணத்தை பற்றி கவலையில்லாமல் வாழ 2017ஆம் ஆண்டு […]

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், இதன் மூலம் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்க்கையும் வளமாகும் என்று தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகள் தங்களது நிதி ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ஐந்து சதவீதத்தை உள்ளூர் தயாரிப்புகளுக்கு செலவிட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை முன்வைத்த அவர், […]

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியை […]

புதுச்சேரியில் நவ. 1ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”ஒரு பக்க பார்க்கிங் புதுவை நகரப் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்களின் நலன்கருதி வருகிற 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து […]

தமிழகத்தில் 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் துவங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, […]