நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டது ஆனால் நவம்பரில் 10 நாட்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பண்டிகை நாட்கள் முடிந்துவிட்டதால், குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பூர்ணிமா, ரஹஸ் பூர்ணிமா போன்ற சில நிகழ்வு காரணமாக விடுமுறை இருக்கும். வழக்கம் போல வங்கி விடுமுறை நாட்களில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
லோக்தந்திரிக் ஜனதா தளம் அரசியல் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரேந்திர குமார் மனைவி உஷா காலமானார். அவருக்கு வயது 82. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எம்.பி வீரேந்திர குமாரின் மனைவியாவார். பெல்காமைச் சேர்ந்த பாபுராவ் குண்டப்பா லெங்கடே மற்றும் பிரமிளா ஆகியோருக்குப் பிறந்த உஷா, 1958 ஆம் ஆண்டு வீரேந்திர குமாரை தனக்கு 18 வயதாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். அன்று முதல், […]
“ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் மற்றும் ரவீனா ரவி நடித்த “ஒரு கிடயின் கருணை மனு” என்னும் திரைப்படம் திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ரகுராம் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் வரவிருக்கும் திரைப்படமான சத்திய சொதனை […]
தென் கொரியா தலைநகர் சியோலில் ஹாலோவீன் பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தின் மத்தியில் நசுக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர். இது குறித்து சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவரான சோய் சியோங்-பியோமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும், சனிக்கிழமை இரவு இட்டாவோனின் சியோலில் பகுதியில் ஏற்பட்ட நெரிசலைத் […]
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. […]
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு போலீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்; தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த […]
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா யசோதா திரைப்பட டப்பிங்கின்போது க்ளுகோஸ் ஏற்றிக் கொண்டே பேசிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா நடித்து வரும் 11ம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் யசோதா. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து சமந்தா ஒரு டுவீட் செய்துள்ளார். அது ரசிகர்களை […]
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகின்றார். சென்னை ராமச்சந்திரபுரா மருத்துவமனையில் முதுகு வலி காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அவர் நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அவருக்கு பதில் , திமுக இளைஞர் அணி செயலாளரும் , […]
பிரபல இசையமைப்பாளர் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளார். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் பிரபல இசையமைப்பாளர் ரகுராம். இவர் 2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு இசை அமைத்திருந்தார். 2011ம் ஆண்டு ரீவைண்ட் , ஆசை படங்களின் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இருப்பினும் இவருக்கு ஒரு கிடாயின் கருணை மனு இவருக்கு சிறந்த படமாக அமைந்தது. சுரேஷ் சங்கையாவின் அடுத்து வரவுள்ள சத்ய […]
ஒரே மாதத்தில் 4-வது முறையாக வந்தே பாரத் ரயில் மாடு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் 30 ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. குஜராத் – காந்தி நகர் இடையே செல்லும் ரயில் முதல் நாளே பசுமாடுகள் மீது மோதியது. அடுத்த நாளே 2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் […]