பயனர்களின் சாதனங்களில் இருந்து அதிக இணையத்தை பயன்படுத்தி, சார்ஜை வேகமாக குறைக்கும் 16 ஆண்ட்ராய்டு செயலிகளை Google Play Store நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல Ars Technica இன் அறிக்கையின்படி, பாதுகாப்பு நிறுவனமான McAfee ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் சார்ஜை குறைக்கும் அளவிற்கு செயலிகள் இருக்கிறது என கண்டறிந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் Google Play Store-இல் இருந்து 16 செயலிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.464 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 45 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக திருச்சி மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், சென்னை மண்டலத்தில் 38 […]

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில அதி தீவிர புயலாக வலுபெறும் என்றும் வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், சாகர் தீவில் இருந்து தெற்கு பகுதியில் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் பரிசாலில் இருந்து தெற்கு – தென்மேற்கு திசையில் 580 கிலோ […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,334 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண்ணால் ஆன விளக்குகளை கொள்முதல் செய்யும் பணிகளும் நடைபெற்றன. கடந்த […]

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்த மக்கள் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதும் […]

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். Material Assistant பணிக்கு மொத்தமாக 418 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வி தகுதியாக டிப்ளமோ அல்லது ஏதாவது […]

கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வையை இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் ருஷ்டிக்கு ஆகஸ்ட் மாதம் மும்பையில் பிறந்த எழுத்தாளர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்தி தாக்குதலைத் தொடர்ந்து அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோனது மற்றும் அவரது ஒரு கை செயலிழந்துள்ளது என்று அவரது இலக்கிய முகவர் கூறினார். “The Satanic Verses” புத்தகத்தை எழுதி பல ஆண்டுகளாக […]

வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று பேச கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் […]

ரெட் புல்லின் இணை நிறுவனரும் உரிமையாளருமான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் தனது 78வது வயதில் காலமானார். யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் பிரிக்ஸுக்கு தகுதி பெறுவதற்கு முன்னதாக மேட்ஸ்கிட்ஸின் தேர்ச்சியை ரெட் புல் உறுதிப்படுத்தியது, அங்கு குழு அவர்களின் ஐந்தாவது F1 கன்ஸ்ட்ரக்டர்களின் பட்டத்தை கோரலாம். மேட்ஸ்கிட்ஸ் 1980 களின் காலகட்டத்தில் ரெட் புல்லை நிறுவினார். வெளிச்சந்தையில் இதற்கான வரவேற்பு அதிகரித்தது. அதே நேரத்தில் பிரபல விளையாட்டு வீரர்களை கொண்டு பிராண்டைக் மக்கள் […]