கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டில் இருந்து வெளியேறிய யானைகளிடம் சிக்கிய இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி உயிர் தப்பினார். கேரளாவில்அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள்வெளியேறி குடியிருப்புபகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது. அப்போது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷாஜி என்பவர் யானையை கவனிக்கவில்லை. […]

தனியார் ஆம்னி பேருந்துகள் சேவையின் அடிப்படையில் இயங்குவதில்லை எனவும், அதுவும் ஒரு தொழில் என்பதால், அவர்களின் தொழிலுக்கு பாதிப்பு வராத வகையில் தான் கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், […]

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள கிளியனூர் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (32) இவரது மகள் சஞ்சனா (5). இந்த நிலையில் சஞ்சனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகுமார், தைலாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சஞ்சனாவை அனுமதித்தார். அங்கு சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சஞ்சனாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது, இதனால் சஞ்சனாவை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் […]

சென்னை அருகே  பிரபல ரவுடியை மனைவியின் கண்முன்னே சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே மறைமலை நகரின் தைலாவரம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர் (28). இவர் கஞ்சா , கொலை  வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியாவார். பல கொலைகளில்தொடர்புடையதால் இவருக்கு எதிரிகள் அதிக அளவில் இருந்துள்ளனர். இதனால் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகர் தைலாபுரத்தில் மாமியார் […]

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரதாப் என்பவது மகன் கௌதம் (26), ஏத் என்பவரது மகன் அமீத்பண்டிட் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள். வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம், பாப்பரம்பாக்கம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான ஷூ தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது இதனையடுத்து, அதே பகுதியில் தொழிற்சாலைக்கு அருகிலேயே இவர்கள் இருவரும் வீடு எடுத்து தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கு […]

சின்னத்திரை சீரியல்களில் நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் ஒன்று தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ளது.  சன்டிவியில் பிரபலமான சீரியல்களில் நெடு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் வள்ளி , கல்யாண பரிசு , கோலங்கள் , வாணி ராணி போன்ற பிரபல சீரியர்கள் 1500 எபிசோட்கள் வரை ஒளிபரப்பப்பட்டது. விஜய்டிவியின் சரவணன் மீனாட்சி(1901 எபிசோட்) , சன்டிவியின் வள்ளி (1961)ஆகிய நெடுந்தொடர்கள் 1900 எபிசோட்கள் ஒளிபரப்பானது. இதுவரை […]

எம்.பி. ஆ.ராசாவின் நீலகிரி சுற்றுப்பயணம் பாஜகவின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைமையும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காதது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அவர் எம்பியாக இருக்கும் நீலகிரி […]

விஜய் டிவில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ராமர்.. தற்போது முன்பைப் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றாததால் ராமரை விஜய் டி.வி. ஒதுக்குகின்றதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் டி.வி.யின் அனைத்து ஷோக்களிலும் ராமர்இருப்பார். ஆனால் தற்போது ராமரை பார்க்கவே முடிவதில்லை. ’’என்னம்மா இப்படி பண்ட்றீங்களேம்மா’’ என்ற வசனத்தை நகைச்சுவையாக மாற்றிய ராமர் பின்னர் பெண் வேடங்களில் நடித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் போல நடித்து […]

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு குரல் கொடுத்ததற்காக கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் பரிசு ஒன்றை வழங்கினார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆதரவாக கூல் சுரேஷ் தனிப்பட்ட முறையில் சிம்புவுக்காகவும் , படம் வெற்றியடையவும் புரோமோஷன் செய்து வந்தார் ’’ வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு’‘ என்பது போன்ற வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இதற்காகவே பலர் படத்தை பார்த்தனர் எனக்கூறலாம். படத்தின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு இயக்குனர், […]

தமிழ்நாடு சிறைத்துறை, திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறை-2ல் காலியாக உள்ள சமூக வழக்கு பணி நிபுணர்கள் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.10.2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழக சிறைத்துறை காலிப்பணியிடங்கள்: Social Case Work Experts பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆண், பெண் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்புபவருக்கு […]