உத்தரபிரேத மாநிலத்தில் தவறாக உச்சரித்ததாக கூறி பள்ளி ஆசிரியர் இரும்புக் கம்பியைக் கொண்டு மாணவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்புபள்ளி மாணவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிகித் டோஹ்ரே என்ற அந்த பள்ளி மாணவர் சமூக அறிவியல் பாடத்தில் ஒன்றை வாசித்துக் காட்டும் போது தவறான உச்சரிப்பை பயன்படுத்தியுள்ளளார். இதனால் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வசிப்பவருக்கு வழங்கப்பட்ட 12 இலக்க, சரிபார்க்கக்கூடிய அடையாள எண் ஆகும். ஆதார் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை UIDAI ஆல் உறுதி செய்யப்பட வேண்டும். நமது கவனக்குறைவால் ஆதார் விவரங்கள் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. நமது ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் உதவிக்குறிப்புகளையும் யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. ஆதார் அட்டை […]
காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துவதில் என்ன தவறு உள்ளது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ’’குண்டு வீச்சு சம்பவமும் ,வன்முறை சம்பவங்களும் நடைபெறக்கூடாது, எந்த மாநிலமாக இருந்தாலும் சரி பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு மாநிலத்தில் சமய […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பா. ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கருமன் கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் பா.ஜனதா ஆதரவாளரான கல்யாண சுந்தரம் (55) என்பவரது வீட்டில் கடந்த 24 ஆம்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு […]
கூடுதலாக 100 ரூபாய் கூலி பெற்றதால் சக நண்பர்கள் ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கட்டிடத் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் 10வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 22 வயது ஆனந்தன் என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், பிரசாந்த் , […]
ரஷ்ய அதிபர் புடின் நிச்சயம் அணு ஆயுத போரை தொடங்குவார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. முன்னாள் மத்திய புலனாய்வு முகமை (CIA) அதிகாரியும், அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளருமான ராபர்ட் பேர், புடின் போர் பதற்றத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார். சிஎன் என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் “ விளாடிமிர் புடின் வெறுமனே இவ்வளவு நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது, தோற்றுப் போகிறார், மேலும் […]
ஜெய்பூரில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றார்.. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனோகர். இவரது 20 வயது மகள் ரக்சயா . கல்லூரிப்படிப்பை முடித்துள்ள நிலையில் சிறு வயதில் இருந்தே அழகிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல் பகுதி நேர வேலையை செய்து அழகிப்போட்டிக்கு தன்னை […]
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள சாணாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் ( 48). இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 1 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் (12). இந்த நிலையில், தன்னையும், மகனையும் கவனித்து கொள்ள 2வதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்துள்ளார். இதன் […]
மாணவர்கள் ஆன்லைனில் கேம்விளையாடி அடிமையாகின்றனர் இதனால் ஆன்லைன் கேமுக்கு தடை செய்ய வேண்டும் என்ற தாயிடம் ஆன்லைன் கேம்ஸை தடை செய்வது சாத்தியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் அதிகமாக ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானர் எனவும் ஆன்லைனில் கேம்விளையாடிக்கொண்டே ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் […]
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, […]